பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களை சம்மேளனம் குறைத்து மதிப்பிடுகிறதா? பிரதியமைச்சரும், வலயக் கல்விப் பணிப்பாளரும் சமமா?

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அரசியல் செல்வாக்கை இப்பிரதேசத்தில் வளர்க்கும் பிரதான முகவர் நிலையமாகச் செயற்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டை அதன் மற்றுமொரு செயற்பாடும் தற்போது துல்லியமாக நிரூபித்திருப்பதாக சமூக ஆர்வலர்களால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை விரைவில் அதன் வருடாந்த சாதனையாளர் விழாவினை நடாத்தத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதை அனைவரும் அறிவோம். Read more

ஜமாஅத்தார் சங்க வேட்பாளர் முஹ்ஸின் ஆசிரியர் வீட்டின் மீது கல்வீச்சு

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிம்பிக்கையாளர் சபைத் தெரிவுக்காக அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கத்தின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ஜனாப். ஏ.எம். முஹ்ஸின் (வேட்பாளர் இலக்கம்: 34) ஆசிரியரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நவவியும் செயற்பட்டதாகக் குற்றச்சாட்டு!

முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாக சபைத் தெரிவு மீண்டும் குழப்பத்தில் முடிவு!!

ஜமாஅத்தார் சங்கம் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கப் போவதாகவும் அறிவிப்பு!!!

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திpணைக்களத்தினால் இன்று 18ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டவாறு நடைபெறவில்லை. இன்றும் குழப்பமே முடிவாக அமைந்தது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதேச சுகாதாரப் பணிப்பாளரிடம் ஏற்கனவே இரகசியமாகத் தெரிவித்திருந்தவாறே தேர்தலை நடாத்த வந்த மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நவவி அவர்களும், அதிகாரிகளும் வாக்கெடுப்புக்கு என ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் வேட்பாளர்களுடனும், ஜமாஅத்தார்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி காலத்தைக் கடத்தியதன் மூலம் வாக்கெடுப்பு நடைபெறாமல் தமது கடமையைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. Read more

‘வார உரைகல்’ பதிவு: 227 திகதி: 18.05.2012 வெள்ளிக்கிழமை. ஒரே பார்வையில் வெளிவந்த செய்திகள்:

நகரசபையின் குப்பை விவகாரம்: தீர்வு காண தேசிய ரீதியாகவும் பாரிய வசூல்

காத்தான்குடி நகரசபையின் திண்மக் கழிவகற்றும் திட்டத்திற்கான நிதி வசூல் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலும் இடம்பெறுகிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் 17ல் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சகல வீடுகளிலும் குடும்பத்திற்கு தலா 500 ரூபா வீதம் இதற்காகப் பணம் வசூலிக்கப்பட்டது. Read more

‘வார உரைகல்’ பதிவு: 226 திகதி: 14.05.2012 திங்கட்கிழமை. வெளிவந்த செய்திகள் ஒரே பார்வையில்:

வீதிக்கடத்தல் நடவடிக்கைக்கு ஜனாதிபதியே வழிகாட்டியாம்!
நகரசபை, சம்மேளனம் மௌனம்!! பொதுமக்கள் விசனம்!!!

ஊருக்குப் பெயர் மாற்றும் யோசனையைக் கைவிட்டு விட்டு, ஊரிலுள்ள வீதிகளுக்குப் பெயர் மாற்றுகின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும், சகபாடிகளான கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முபீன் மற்றும் பரீத் ஆகியோரும் தற்போது பாரம்பரியமான பெயர்களைக் கொண்ட காத்தான்குடியின் வீதிகளை வேறு இடங்களுக்கு கடத்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி மக்கள் ‘வார உரைகல்’லிடம் விசனம் தெரிவிக்கின்றனர். Read more

விஷேட செய்தி: காத்தான்குடி குப்பை விவகாரம் தேசிய முக்கியத்துவம் பெறுகின்றது!

காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் சேருகின்ற திண்மக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் திக்குமுக்காடி வரும் சர்வாதிகாரத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையிலான நகரசபை ஆளுந்தரப்பு நிர்வாகம், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமாவின் அனுசரணையோடு நகரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள திண்மக்கழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அடையாளப்படுத்தப்பட்ட காணியொன்றை பூநொச்சிமுனைப் பகுதியில் வாங்கவுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவித்து ஊரிலுள்ள குடும்பங்களிடம் தலா 500 ரூபா வீதம் பணம் அறவிட்டிருந்தது. Read more

‘வார உரைகல்’ பதிவு: 224 திகதி: 07.05.2012 திங்கட்கிழமை. ஒரே பார்வையில் வெளியான செய்திகள்:

சம்மேளன நிர்வாகமும், ஜம்இய்யதுல் உலமாவும் பொதுமக்களை ஏமாற்றிவிட்டது!

பொதுமக்கள் குடியிருப்புப் பிரதேசமான புதிய காத்தான்குடி கிழக்கு 167டீ கிராம உத்தியோகத்தர் பிரிவில் திண்மக்கழிவுகற்றும் திட்டத்திற்கான காணிக் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டிருப்பது குறித்து இப்பகுதிப் பொதுமக்கள், பிரமுகர்கள் பலரும் விசனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி நகரசபையின் இத்திட்டத்திற்காக காணியொன்றை தெரிவுசெய்து அடையாளப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருந்ததுடன் குறித்த அக்காணியைக் கொள்வனவு செய்வதற்கே பொதுமக்களிடமிருந்து குடும்பத்திற்கு தலா 500 ரூபா வீதம் நிதியுதவி அளிக்குமாறும்  உத்தியோகபூர்வமாகக் கேட்டிருந்தது. Read more

‘வார உரைகல்’ பதிவு: 225 திகதி: 11.05.2012 வெள்ளிக்கிழமை. வெளிவந்த செய்திகள்:

ஏ.எல்.எஸ். மாவத்தைக் காணிக் கொள்வனவு விவகாரம்:
ஜம்இய்யதுல் உலமாமீது தீர்மானம் திணிக்கப்பட்டதாம்!

காத்தான்குடி நகரசபையின் திண்மக்கழி வகற்றும் திட்டத்திற்காக பூநொச்சிமுனையில் அடையாளப்படுத்தி 60 இலட்சம் ரூபா விலையும் மதிப்பிட்டிருந்த காணியை வாங்குவதற்காக பொதுமக்களிடமிருந்து 500 ரூபா வீதம் பணம் அறவிட்ட காத்தான்குடி சம்மேளனமும், ஜம்இய்யதுல் உலமாவும் அவ்வாறு பணம் அறவிட்டதன் பின் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டு ஏ.எல்.எஸ் மாவத்தையில் 50 சதுர அடி நீள அகலமும் கொண்ட 13 காணிகளை 36 இலட்சம் ரூபாவுக்கு வாங்கிய ஏமாற்றுச் செயல் குறித்து 224ம் ‘வார உரைகல்’ செய்தி வெளியிட்டிருந்தது. Read more

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் பலவந்தமான பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவு!

-கதவைப் பூட்டித் தடுத்து வைத்த நிலையில் 31 பேரை பட்டியலிட்டதாகக் குற்றச்சாட்டு-

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசலுக்குரிய நிர்வாகிகள் தெரிவினை பள்ளிவாசலில் வைத்து பகிரங்கமாக ஜமாஅத் தார் முன்னிலையில் நடத்தாமல் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தனது காத்தான்குடி அலுவலகத் தில் பூட்டிய அறைக்குள் தமது சங்கப் பிரதிநிதி களைத் தடுத்து வைத்துக் கொண்டு பலவந்த மாகத் தெரிவு செய்திருப்பதாக அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

இதுவிடயமாக வக்பு சபைப் பணிப்பாளருக்கும் ஜமாஅத்தார் சங்கம் கடந்த 11ம் திகதி முறைப் பாடொன்றைச் செய்துள்ளதுடன், பிரதியமைச்சரி னால் திட்டமிட்டுத் தெரிவு செய்யப்பட்ட 31 பேர் கொண்ட நிர்வாக சபைப் பெயர்ப்பட்டியலை அங்கீகரிக்க வேண்டாம் எனவும் பணிப்பாள ரைக் கேட்டுள்ளது. Read more

சம்மேளனத்தின் சாதனையாளர் விழாவில் அமைச்சர் பௌஸி அவர்கள் பிரதம அதிதியாக அழைக்கப்படுவாரா?

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை கடந்த 13ம் திகதி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளி வாசலில் நடைபெற்ற ஜும் ஆத் தொழுகையின் பின்னர் 2011ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றை நடாத்தியது.

எதிர்வரும் மே மாதமளவில் இஸ்லாமிய கலாசசார மண்டபத்தில் வழமைபோன்று ‘சாதனையாளர் விழா’ ஒன்றையும் மிக விமரிசையாக நடாத்துவதற்கு இச்சபை ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அறியப்படுகின்றது.

சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபையால் நடாத்தப்படும் இத்தகைய கௌரவம் வழங்கும் நிகழ்வுகளுக்காக வருடாந்தம் பல இலட்சக் கணக்கான ரூபா பணம் செலவிடப்படுகின்றது. இப்பணம் சம்மேளனத்தின் ஹஜ் குழுவுக்கு வருடாந்தம் கிடைக்கும் இலாபப் பணத்திலிருந்தே வழங்கப்பட்டும் வருகின்றது. Read more

Follow

Get every new post delivered to your Inbox.