Archive for the ‘ கவிதைகள் ’ Category

மீண்டும் ஒரு அழைப்பாணை..! (விழிப்புணர்வுக் கவிதை)

- இளைய புத்திரி  - அழைப்பொன்றை  விடுக்கின்றேன்   அண்ணலார்  உம்மத்தே அநீதிக்கு   எதிரான   களமொன்றைத்   தாபிக்க..! ஊழல்கள்   மோசடிகள்    உச்சத்தை     எட்டுமுன்னே உரிமைக்   குரலொன்று    உரைகல்லாய்    வியாபிக்க..! கறையற்ற   வாழ்வும்   குறையற்ற   நெறியும் முறையென்று   சுமந்த   மனிதர்கள்    நம்முன் இலை மறையாய்   இருந்து    இரத்தத்தை   உறிஞ்சும் அட்டைகள்    கூட்டத்தின்   கொட்டத்தை    அடக்க..! ஏழைகள்    வாழ்வில்    இன்பங்கள்   பெருக்கும் ஏற்றமிகு   மார்க்கத்தில்    இழிவுகள்    சேர்க்கும் வஞ்சகர்   கூட்டத்தின்    அஞ்சாத   மோசடியை நெஞ்சில்    உரத்தோடு    நிர்மூலம்    செய்வோம்![ READ MORE ]

எங்கள் உயிரே..!

கண்ணூரில் பள்ளிகொள்ளும் எங்கள் கண்ணுக்குள் வாழுகின்ற தங்கள்! மண்ணுக்குள் மறைந்தாலும் எங்கள் மனதுக்குள் உறைந்துள்ள திங்கள்! இகத்தினில் கரந்தாங்கி ஏற்று இறைபாதை காட்டிய நீங்கள் பரத்திலும் எம்கரம் தாங்கி பரிந்துரை அருள்வீரே நாதா! அண்ணலின் பேரராம் உங்கள் ஆற்றலை அறிந்தோமே நாங்கள்! திண்ணமாய் உங்களின் வழியில் தினந்தினம் அடியொற்றி வாழ்வோம்! அந்துரூ தோட்டத்தில் மலர்ந்த ஆன்மீக மலரேதான் தாங்கள்! ஏந்தலர் வழியினை இயம்ப எம் நாட்டில் கால் பதித்தீரே! ஷரீஅத்தை உடலாய் அமைத்து தரீக்கத்தை உணர்வாய் வடித்து [ READ MORE ]

ஏமாளிகளின் தேசம் -கவிதை-

நான் வானத்தைப் பார்த்து எச்சிலைத் துப்புவதும் அது காற்றோடு கலந்து என் மூஞ்சில் விழுவதும் சுவரில் பந்தை எறிவதும் என்னை நோக்கி வருவதும் நினைத்து நினைத்து நான்கு சுவருக்குள் சிரித்துக் கொள்வேன்! உண்மையைப் பிடுங்கியெறிவேன்! பொய்யை நாட்டித் தழைக்கச் செய்வேன்! அப்போதும் கூட தோழர்கள் தண்ணீர் ஊற்றுவார்கள்! நான்கு சுவருக்குள் சிரிப்பேன் கதவைத் தட்டினால் கவலையோடு அழுவேன் பாவமென்று மனச்சாட்சி சொல்லும்தான்! என் பிழைப்பை நினைத்தால் எல்லாம் மரத்துப் போகும் என்ன மனிதர்கள் இவர்கள்? செத்துப்போன வாக்குறுதிகளுக்கும் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.