Archive for the ‘ சமூக அரசியல் களம் ’ Category

எம்மைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை

-ஈத் பெருநாள் தினத்தில் ஈழத்தின் சொற்கொண்டல் கருத்து- அரசியல்வாதிகளை நம்பிப் பயனேதும் இல்லை. அவர்கள் தேர்தல் காலங்களில் நம்மைக் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என ஷம்சுல் உலமாவும், காத்தான்குடி காதிரிய்யா திருச்சபையின் ஸ்தாபகருமான ‘ஈழத்தின் சொற்கொண்டல்’ மௌலவி அல்ஹாஜ் ஏ. அப்துர் றவூப் மிஸ்பாஹி அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 31ம் திகதி காலையில் காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் மௌலவி அப்துர்றவூப் மிஸ்பாஹி அவர்கள் எழுதிய ‘கஸீததுல் புர்தஹ்’ ஷரீபின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் [ READ MORE ]

மீண்டும் ‘கிழக்கு மாகாண முஸ்லிம் முதலமைச்சர்’ கேஷம் எழுப்பப்படுமா?

நமதூரில் நடைபெற்றுவரும் அதிரடியான அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மிக விரைவில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பை அரசாங்கம் வெளியிடக்கூடும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். பல மாதங்களாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த பிரதான வீதி அபிவிருத்தியின் எச்ச சொச்ச வேலைகளும், ஆங்காங்கே சந்திகள் தோறும் அமைக்கப்படுவதாகக் கூறப்பட்ட அலங்கார வளைவு வேலைகளும், முடங்கிப் போயிருந்த புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் கட்டிட நிர்மாண வேலைகளும் இப்போது மீண்டும் புத்தெழுச்சியுடன் கட்டியெழுப்பப்படுவதான காட்சிகள் நமது மக்களின் கவனத்திற்கு [ READ MORE ]

விழிப்படைந்துள்ளார் ஹிஸ்புல்லாஹ்!நல்லாட்சி ஆதரவாளர்களை ஈர்த்தெடுக்க ரெலிகொம் வட்டாரம் முயற்சிக்குமாம்!!

-’வார உரைகல்’ விஷேட செய்தி 10.04.2011- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ரெலிகொம் அலுவலகத்தில் நேற்று (09.04.2011) இரவு இஷாத் தொழுகையின் பின்னர் அவரது அரசியல் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில், நடந்து முடிந்த நகரசபைத் தேர்தலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வாக்கு வங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் அதனை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் முக்கிய ஆதரவாளர்கள் அனைவரும் தீவிரமாக ஈடுபட வேண்டுமெனவும் முடிவெடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன[ READ MORE ]

மு.கா. அடி வாங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிறைவேறியதில் முக்கியஸ்தர் பெருமிதம்!

‘வார உரைகல்’ பதிவு: 178 திகதி: 08.04.2011 பக்கம்: 03 -முபீனின் வாக்கு வங்கியிலும் சுனாமிச் சரிவு– மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தோல்வியைத் தழுவி பலத்த அடியைப் பெற வேண்டும். அப்போதுதான் தலைமைக்கு புத்தி வரும் என்ற தனது எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாக அக்கட்சியின் தலையையும், உடலையும் இணைத்து நிற்கும் கழுத்துப் போன்ற கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தனது நெருங்கிய நண்பர்களிடம் பெருமைப்பட்டு பேசி வருவதாக அறியப்படுகின்றது. தற்போது இம்மாவட்டத்திலுள்ள மூன்று உள்ளுராட்சி சபைகளிலும் வெறும் நான்கு உறுப்பினர்களை [ READ MORE ]

ஹிஸ்புல்லாஹ்வின் கோட்டைக்குள்ளிருந்தே நல்லாட்சிக்கான எழுச்சியை நாம் ஏற்படுத்தியுள்ளோம்!

‘வார உரைகல்’ பதிவு: 178 திகதி: 08.04.2011 பக்கம்: 01 -தலைநகர் புத்திஜீவிகள் மத்தியில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் சூளுரை- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை தலைநகர் கொழும்பில் வாழுகின்ற காத்தான்குடியையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்த முக்கியஸ்தர்களுடனான அரசியல் கலந்துரையாடல் சந்திப்பொன்றினை கடந்த 01ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு நடாத்தியது. கொழும்பு மெரைன் வியூ மண்டபத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் சூறா சபை உறுப்பினர்களான டாக்டர் [ READ MORE ]

ஆறு ஆசனங்களை வென்றுள்ளதாக ஹிஸ்புல்லாஹ் கூறித் திரிவது அப்பட்டமான பொய்யாகும்

‘வார உரைகல்’ பதிவு: 178 திகதி: 08.04.2011 பக்கம்: 04 -பொறுப்புடன் மறுக்கிறார் றவூப் ஹாஜியார்- நடந்தேறிய காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் தமது தரப்பு ஆறு உறுப்பினர்களை வென்றுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்து வரும் கூற்றானது அப்பட்டமான பொய்யாகும்.  அவரது தரப்பினர் ஐந்து ஆசனங்களையே பெற்றுள்ளனர். நான் ஸ்ரீ.ல.சு.கட்சி சார்பான ஆசனத்தை எமது நகர சபையில் தொடர்ந்தும் தக்க வைத்துள்ளேன் என்று மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அல்ஹாஜ் றவூப் [ READ MORE ]

ஹிஸ்புல்லாஹ் மீண்டும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸில் இணைவாரா?

-’வார உரைகல்’ பதிவு: 178 திகதி: 08.04.2011 பக்கம்: 01- நடந்து முடிந்த நகரசபைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள இன்றைய அரசியல்வாதிகளின் வாக்கு வங்கி நிலவரங்களையடுத்து சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மூன்றாவது தடவையாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையக் கூடும் என அரசியல் வட்டாரங்களில் பலமான ஹேஸ்யம் கூறப்பட்டு வருகின்றது. இதற்கு ஆதாரமாக தேர்தல் முடிந்த பின்னர் அவர் கருத்து வெளியிட்டிருக்கும் பத்திரிகை அறிக்கையினை மேற்கோள்காட்டி நோக்கர்கள் பலரும் தமது [ READ MORE ]

அமைச்சர் றவூப் ஹக்கீமின் சூசகமான அறிவுரைக்கமைய காத்தான்குடியில் அ.இ.ம.கா.வுடன் ஸ்ரீ.ல.மு.கா. இணைந்தது!

-கட்சியைப் புனரமைப்பதாக தவிசாளர் கேலிக்கூத்து- காத்தான்குடி நகரசபையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையிலான ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் இணைந்து கொண்டது. கடந்த 06ம் திகதி புதன்கிழமையன்று காத்தான்குடி நகரசபையின் முதலாவது சபை அமர்வு அ.இ.ம.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்றபோதே ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் சார்பில் இச்சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினரான சல்மா அமீர் [ READ MORE ]

ஜனாதிபதி வாக்களித்த மேலதிக பிரதேச செயலகத்தை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பெற்றுத் தந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்

-ஸ்ரீ.ல.சு.க. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் றவூப் ஹாஜியார் மனந்திறந்து அறிவிக்கின்றார்!- “காத்தான்குடிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகைதந்தபோது அவரின் முன்னிலையில் எமது மக்களின் முக்கிய தேவைகளாகக் கருதப்பட்ட இரண்டு விடயங்களை காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நான் முன்வைத்தேன். “ “அவ்விரண்டு கோரிக்கைகளையும் தான் ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்தால் நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன் என ஜனாதிபதி வேட்பாளராக அந்த மேடையில் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வூர் மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.” “அதிலொன்றான [ READ MORE ]

நம் சமூகத்தின் மடமை, மறதி, சுயநலம்…! இன்றைய அரசியல் வியாபாரத்தின் மூலதனம் இவைகளே..!!

- ‘வார உரைகல்’ 150வது சிறப்பிதழுக்கு பொறியியலாளர் அப்துர் றஹ்மான் விஷேட பேட்டி - கேள்வி: போரின் பின்னரான இலங்கையில் பல்வேறுபட்ட அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இப் பின்னணியில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முன்னெடுப்புகள் திருப்திகரமாக இருக்கின்றது என நீங்கள் கருதுகிறீர்களா? பதில்: பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்நாட்டின்  சகல விவகாரங்களும் ஒரு புதிய கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகின்றன. அந்த வகையில்தான் இந்த நாட்டின் பொருளாதார அணுகு முறைகள், சர்வதேச நாடுகளுடனான உறவுகள், மீள் இணக்கப்பாட்டு முயற்சிகள் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.