Archive for the ‘ சிறு கதைகள் ’ Category

வேகாத பருப்பு (சிறுகதை) -அபூ ராயித்-

“VAARAURAIKAL” Vol:171 -11.02.2011 Page: 06 அஸீஸ் காக்காவின் டீக்கடையில் அரசியல் மேடை சூடுபிடித்திருந்தது. அரசியல் ஆர்வலர்களான பொது ஜனங்கள் அலியார் காக்காவை சுற்றி வளைத்து நின்று கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். இடது கையில் அன்றைய தமிழ் தினசரியும் வலது கையில் சிகரட்டுமாக புகைந்து கொண்டிருந்தார் அலியார் காக்கா. அவரது வாயிலிருந்து புகையுடன் கலந்த அரசியல் எதிர்வு கூறல்களும் வெளிவந்து கொண்டிருந்தன. திடீரென காற்றைக் கிழித்துக் கொண்டு மோட்டார் சைக்களில் வந்திறங்கினார் சுலைமான் காக்கா. வழமையாக [ READ MORE ]

ஓட்டைப்பாத்திரம் (சிறுகதை) –மும்தாஜ் பேகம்-

‘என்ன மூத்தம்மா? எப்பிடி சுகம்? என்ன கறி இன்டைக்கி எடுத்தது? இருந்தத்த விடவும் இளச்சிப் போயிட்டீங்களே’ என்று மூச்சு விடாமல் கேட்டவரை தீர்க்கமாய்ப் பாக்கிறேன். கொஞ்சங்கூட பெருமையே இல்லாம இந்த ஊத்தை பிடித்த குசினிக்குள்ளே வந்து இந்தப் பிள்ள கேட்ட கேள்வியிலேய உச்சி குளிர்ந்து பரவசமாகியது. ‘நா நல்லந்தான் மன. பாழாப்போன கால் கடுப்பும் இருமலுந்தான் என்னப் போட்டுப் படாத பாடு படுத்துது.’ மேலமேல எதுவும் பேச எனக்கு வாய் வரல்ல. சிரிச்சு மழுப்புறன். பக்கத்தில கறிச் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.