Archive for the ‘ நபிகளாரின் வரலாறு ’ Category
நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே எல்லா மக்களிடமும் காணப்பட்ட நற்பண்புகள் அனைத்தையும் தனக்குள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தார்கள். நேரிய சிந்தனை, ஆழ்ந்த பார்வை, நுண்ணறிவு அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார்கள். நீண்ட மௌனத்தால் ஆழ்ந்து சிந்தித்து உண்மையை அறிவார்கள். தங்களது முதிர்ச்சியான அறிவாலும் தூய இயற்கைக் குணத்தாலும் மனித வாழ்வின் பகுதிகளையும், மக்களின் செயல்களையும், சமூகத்தின் நிலைகளையும் மிகத் தெளிவாக ஆராய்ந்து மக்களிடம் காணப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களை வெறுத்து ஒதுக்கினார்கள். மக்களுடன் மதி நுட்பத்துடன் பழகுவார்கள். [ READ MORE ]
நபி (ஸல்) அவர்களின் 35வது வயதில் குறைஷியர்கள் கஅபாவைப் புதுப்பித்தனர். கஅபா ஓர் ஆள் உயரத்திற்கே பாறைகளால் கட்டப்பட்டிருந்தது. அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே மேல் முகடு இன்றி ஒன்பது முழம் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும், கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. இந்நிலையில் கஅபாவினுள்ளிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டத்தினர் திருடிச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் இறைதூதர் ஆவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன் மக்காவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஅபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. அதன் மீது [ READ MORE ]
ஃபிஜார் போர் நபி (ஸல்) அவர்களின் இருபதாவது வயதில் உக்காள் சந்தையில் குறைஷியரும், கினானா வும் கைஸ் அய்லான் குலத்தவருடன் சண்டையிட்டனர். அதற்கு ‘ஹர்புல் ஃபிஜார்’ என்று சொல்லப்படும். கினானாவைச் சேர்ந்த ‘பர்ராழ்’ என்பவன், கைஸ் அய்லான் குலத்தைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கடத்திச் சென்று கொலை செய்து விட்டான். இந்தச் செய்தி உக்காள் சந்தையில் பரவியது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் சண்டையிட்டனர். குறைஷ் மற்றும் பனூ கினானாவுக்கு ‘ஹர்ப் இப்னு உமையா’ தலைமை [ READ MORE ]
நெஞ்சு திறக்கப்படுதல் செவிலித் தாயாரான ஹலீமாவின் தொடர்ச்சியான வேண்டுகோளினால் நபி (ஸல்) அவர்கள் மீண்டும் ஸஅத் கிளையாருடனேயே அழைத்து வரப்பட்ட சில மாதங்களுக்குப் பின் அவர்களது நெஞ்சு திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றதென இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். ஏனைய வரலாற்றாசிரியர்கள் நபி (ஸல்) அவர்களின் நான்காவது வயதில்தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றதென்றும் கூறுகின்றனர். அந்நிகழ்ச்சி பற்றி அனஸ் (ரலி) கூறுவதாவது: ‘நபியவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருகைதந்து நபியவர்களை மயக்கமுறச்செய்து, நெஞ்சைத் [ READ MORE ]
அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின் தலைவர் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லழ்ழாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்காவில் பனூ ஹாஷிம் பள்ளத்தாக்கில் ரபீஉல் அவ்வல் மாதம் 9ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் திகதி) அதிகாலையில் பிறந்தார்கள். அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது ஆண்டு. ‘அனூ ஷேர்வான்’ என்ற கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம் ஆண்டு. நபி (ஸல்) அவர்கள் பிறந்தபோது அவர்களது நுபுவ்வத்திற்கு முன்னோடியாக அன்னை ஆமினாவின் [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.