உலமாக்களின் கேள்விக்கு விடையளிக்காத ஹிஸ்புல்லாஹ்வுக்கு உலமாக்களிடம் கேள்வி கேட்க என்ன யோக்கியதை உள்ளது?
“VAARAURAIKAL” Vol: 173 -25.02.2011- Page: 05
-PMGGயின் இரண்டாவது பிரச்சாரக் கூட்டத்தில் அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி காட்டமாகக் கேள்வி-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி நேரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்கமிருந்த சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அரச தரப்புக்குத் தாவிய பின்னர் உலமாக்களின் ஆலோசனைப்படிதான் அவ்வாறு தான் தாவியதாக விளக்கம் கூறினார்.
அவ்வாறு அவருக்கு ஆலோசனை கூறிய உலமாக்கள் யார் என்பதைக் கூறுமாறு உலமாக்களால் வினவப்பட்ட கேள்விக்கு இன்று வரைக்கும் அவர் பதிலளிக்காமல் மௌனமாக இருந்துவரும் நிலையில், உலமாக்களின் சட்ட யாப்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அரசியல் மேடைகளில் நின்று உலமாக்களிடம் கேள்ளி கேட்பதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரான அஷ் ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி கேள்வி எழுப்பினார்.
காத்தான்குடி நகர சபைக்கு தொப்பிச் சின்னத்தில் முதலாம் இலக்க சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தன் 2வது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை கடந்த 19ம் திகதி சனிக்கிழமை மாலை காத்தான்குடி குட்வின் சந்தியில் நடாத்தியபோதே அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி மேற்கண்டவாறு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை நோக்கி பகிரங்கமாகக் கேள்விக்கணை தொடுத்தார்.
இப்பிரச்சாரக் கூட்டம் அவ்வியக்கத்தின் சூறா சபை உறுப்பினர் ‘வித்தியாகீர்த்தி’ எம். எஸ். அமீரலி ஆசியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் தனது தலைமையுரையில் கூறியதாவது: Continue reading