மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் நூர்தீன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக கடந்த 10.12.2010ல் ‘காத்தான்குடி.இன்போ’ என்னும் இணைய தளம் செய்தியொன்றை வெளியிட்டது. அதுதொடர்பான விளக்கமொன்றை எமது வாசகர் அப்துல் மனாப் மேற்படி இணையதளத்திற்கு அனுப்பியிருந்த போதும் அதனை அவர்கள் பிரசுரிக்கவில்லை எனத் தெரிவித்து அவரது விளக்கத்தை ‘வார உரைகல்’ லில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அது இங்கே பிரசுரிக்கப்படுகின்றது. -பிரதம ஆசிரியர்
Kattankudi info இணையத்தள செய்தியாளர் நூர்தீன் அவர்கள் கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்களின் ஒன்று கூடல் நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்றபோது வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி தங்களது இணையத்தளத்தில் 12.10. 2010 அன்று வெளியாகி இருந்ததது.
இந்தத் தகவலினை அபூறப்தான் எனும் செய்தியாளர் சுட்டிக்காட்டியிருந்ததோடு அவரது பெயரிலேயே மேற்குறித்த நிகழ்வு தொடர்பான செய்தியும் படங்களும் வேறாகவும் வெளியாகி இருந்தன.
இந்த செய்தியை நான் முழுமையாக வாசித்தபோது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருந்தது.
காரணம், செய்தியின் தலைப்பில் ஊடகவியலாளர் நூர்தீன் வெளியேற்றப்பட்டார் என்றும், செய்தியின் உள்ளடக்கத்தில் அவரை விசாரித்த நபரின் முறைகேடான அணுகுமுறையினால் ஊடகவியலாளர் நூர்தீன் வெளியேறினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களோடு இன்னும் பல விடயங்களும் சொல்லப்பட்டிருந்தன.
மேற்குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளரும், அங்கு கடமைபுரியும் உத்தியோகத்தருமான குமார் என்பவரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும், தான் அந்த ஒன்றியத்தின் செயலாளர் கணேசிடம் அனுமதி பெற்றே வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது
அத்தோடு இது தொடர்பாக மாஹிர் என்பவரிடம் விடயத்தைக் கூறிவிட்டு வெளியேறியதாகவும், பின்னர் இந்த நிலையத்தின் மட்டக்களப்பு இணைப்பாளர் பிர்தௌஸ் நழீமியிடம் தொலைபேசியில் விடயத்தைக் கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், அந்த நிலையத்தின் பணிப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும், அதில் தான், அவ்வமைப்பின் உத்தியோகத்தர்களுக்கு ஒழுக்கம் மற்றும் நாகரீகம் போன்றவற்றை கற்றுக் கொடுப்பதன் அவசியம் பற்றி எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். Continue reading →