புதிய காத்தான்குடி – பரீட் நகர் பாம் வீதியில் அமைந்துள்ள மனாறுல் ஹுதா பள்ளிவாசல் முன்றலில் இன்ஷா அழ்ழாஹ், நாளை (03.02.2015) செவ்வாய்க்கிழமை காலை 09:30 மணிக்கு நடைபெற, பரீட் நகர் மக்கள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்’ தொடர்பாக இன்று மாலை காத்தான்குடியில் விநியோகிக்கப்பட்ட பிரசுரம்:
காத்தான்குடி நகரசபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சோலை வரி அறவீடு தொடர்பில் இடம்பெற்ற நிதி நிர்வாக மோசடி தொடர்பில் ‘வார உரைகல்’ அம்பலப்படுத்திய முறைப்பாடு குறித்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகர சபை உறுப்பினர் SHM. பிர்தௌஸ் ஆசிரியர் இன்று மட்டக்களப்பு குற்றப்புலனாய்வுப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்.