வைத்திய அறிக்கையாக ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட நோய் நிருணய அட்டையிலும் கேள்விகள் பல இருக்கின்றன.
வைத்திய அறிக்கையாக ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட நோய் நிருணய அட்டையிலும் கேள்விகள் பல இருக்கின்றன. எத்தகைய பதில் நடவடிக்கைக்கு முகம் கொடுக்கவும் நாம் தயார்!!
கடந்த 02.09.2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடிஇன்போ, சாஜில் நியூஸ், kkytimes போன்ற இணையதளங்கள் மற்றும் முகநூல் பக்கங்களில் சிறுவன் றிஜான் மீதான எரிகாயங்கள் தொடர்பில் வைத்திய அறிக்கை எனப் பிரசுரிக்கப்பட்ட நோய் நிருணய அட்டையிலும் எமக்கு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
சிறுவன் றிஜானை மின்சாரமே தாக்கியது என்பதை நிரூபிக்க முற்பட்ட சாஜில் நியூஸ் இணையதளம், அது தொடர்பாக அந்த வர்த்தக ஸ்தாபனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV கெமரா பதிவு செய்த காட்சிகளை காணொளி வீடியோவாக வெளியிட்டபோது, மூன்றாம் மாடியில் மின்சார ஒளி வெளியாகி சிறுவன் றிஜான் நிலைதடுமாறி கீழே விழுகின்ற, மீண்டும் எழுகின்ற காட்சிகள் எல்லாம் பதிவாகியுள்ள நேரம் இரவு 07:25:57 வரையிலும் பதிவாகியுள்ளது. Continue reading