ஓகஸ்ட், 2014 க்கான தொகுப்பு

மும்மொழிகளிலும் இரு நூல்கள் வெளியீடு

invitationலண்டனில் வசித்துவரும் எச். முனவ்வர் எழுதிய “மண்ணிலிருந்து விண்வெளிவரை அல்குர்ஆன்” மற்றும் “சூரியன் சுருட்டப்படும்போது கடல்கள் தீமூட்டப்படும்போது: அல்குர்ஆனில் இயேசுநாதர்” போன்ற இருநூல்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளன.
 
எதிர்வரும் திங்கட்கிழமை 01ஆம் திகதி பி.ப.4.45 மணியளவில் மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள ஜம்மித்துஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

Continue reading

முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தி இழப்பும் த.தே.கூட்டமைப்பு மீதான காழ்ப்புணர்ச்சியும்

sampanthan_hakeem_001ஆரம்பத்தில் இருந்தே ஜனாதிபதி மஹிந்தவுடன் கைகோர்த்து நிற்கின்ற அமைச்சர்களான றிஷாத் பதியூதீன், அதாவுல்லா ஆகியோர்களுக்கு ஜனாதிபதி தொட்டு இந்த ஆட்சியில் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது. அந்தளவுக்கு ஹக்கீமால் இருக்க முடியவில்லை. காரணம் ஹக்கீம் மீது ஜனாதிபதியும் அரசும் நம்பிக்கை இழந்து விட்டது.

தற்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்துள்ளது என்பது கூட ஹக்கீம் தானாக விரும்பி போகவில்லை. இழுத்து வந்துள்ளார்கள். Continue reading

ஓய்ந்தது மோடி அலை: மகிழ்ச்சியில் காங்கிரஸ்

ModiIndia Congressகாங்கிரஸ் கட்சி நான்கு மாநில இடைத்தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ளதால் மோடி அலை ஓய்ந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பீகார், கர்நாடகம், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும்; பாஜக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. Continue reading

ஒபாமா பலத்தை காட்டுகிறார் – மகிந்த கடன் வாங்குகிறார்!

obama_mahinda_001அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தமது நாட்டின் பலத்தை காண்பிக்க தனியான விமானத்தில் பயணம் செய்தாலும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடன் வாங்க தனியான விமானத்தில் செல்வதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆயிரம் லட்சம் ரூபாகடன் வாங்கினால்இ அதில் ஆயிரம் லட்சம் ரூபா விமான செலவுகளுக்கு சென்று விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Continue reading

பாறூக் ஹாஜியார் பதவி துறந்தார்!

Farook-Hajiகாத்தான்குடி வர்த்தகர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலமாகவே பெயரளவில் இருந்து வந்த முன்னாள் ‘அல் இஹ்ஸான் ஹோட்டல்’ உரிமையாளர் அல்ஹாஜ் பி.ரீ.எம். பாறூக், ‘வார உரைகல்’ முன்னெடுத்து வந்த தொடர்ந்தேர்ச் சியான விழிப்பூட்டல் செயற்பாடுகளின் காரணமாக தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.

அவரது இராஜினாமாவை, வர்த்தகர் சங்கத்தின் பொருளாள ரும், பிரதேசத்தின் பிரபல மொத்த வர்த்தகருமான அல்ஹாஜ் எம்.ஐ.எம். மக்பூல் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரிடம் நேரில் உறுதிப்படுத்தினார். Continue reading