காத்தான்குடி ஆசிரியையால் முஸ்லிம்களின் இளவயது திருமணங்கள், விவாகரத்துக்கள் NGOக்களுக்கு விற்கப்படுகின்றனவா?
-முஹம்மது நியாஸ்-
காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்றுவருகின்ற இளவயது திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளின் எண்ணிக்கைகள், விபரங்கள் அனைத்தும் ஒரு அரச சார்பற்ற மேலைத்தேய தனியார் தொண்டு நிறுவனம் (NGO) ஒன்றிற்கு விற்கப்படுவதாக நம்பகமான தகவல்கள் பல கிடைத்துள்ளன.
காத்தான்குடியைச் சேர்ந்த, அடிக்கடி மேலைத்தேய நாடுகள் பலவற்றிற்கு தனிப்பட்ட பயணங்களை “தனியாக” மேற்கொள்கின்ற “ஆங்கில மொழிப்புலமை” வாய்ந்த பெண் ஆசிரியை ஒருவர் குறித்த அந்த NGOவிடம் இதுவரைக்கும் சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய்களுக்கும் மேற்பட்ட பணத்தொகையை பெற்றுக்கொண்டு இந்த வேலைத்திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. Continue reading