ஜூன், 2014 க்கான தொகுப்பு
வடக்கு மாகாண சபையின் 11வது அமர்வு இன்று 26.06.2014 வியாழக்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை பேரவைக் கட்டிடத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அங்கத்தவர் அய்யூப் அஸ்மின்; தேசிய முக்கியத்துவம் கருதியும், இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் நலன்களை முன்னிறுத்தியும் அண்மையில் பேருவளை, அளுத்கமை, வெலிப்பண்ணை, தர்ஹா நகர், பாணந்துறை, தெஹிவளை, மாவனல்லை போன்ற தென்னிலங்கைப் பிரதேசங்களில் இடம்பெற்ற இனவன்முறைத் தாக்குதல்கள் மீதான கண்டணப் பிரேரணை ஒன்றினை இச்சபை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளொன்றை முன்வைத்தார். Continue reading