ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட செயற்குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை, தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து சற்று முன்னர் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பிரகடனம் செய்து வைத்தார்.
அளுத்கம சம்பவம் தொடர்பில் முக்கிய பல தீர்மானங்களை எடுப்பதற்கான அவசர கூட்டமொன்று தற்பொழுது தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு வழங்கிய அறிக்கையில் உண்மையற்ற கருத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் இந்தக் கருத்தை வெளியிட்டதுடன், இலங்கையில் சிறுபான்மை மக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அளுத்கமையில் முஸ்லிம் – பௌத்த மக்களிடையில் மீண்டும் முறுகல் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அப்பிரதேசத்தில் அமுல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் காத்தான்குடி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து தலிபான் தீவிரவாதிகள் சர்வதேச சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசக் காவல்துறையான ‘இன்டர்போல்’ எச்சரிக்கை விடுத்திருப்பதை காத்தான்குடி சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த சமூக ஊடகம் என்னும் வகையில் ‘வார உரைகல்’ முற்று முழுதாக நிராகரிக்கின்றது.