ஓட்டமாவடி மாணவியைத் துஷ்பிரயோகித்த பாக்கீர் மாஸ்டருக்கு ஒரு வாரம் விளக்கமறியல்!
கடந்த ஒரு வார காலமாகத் தலைமறைவாகத் திரிந்த காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினரும், பிரத்தியேக டியூஷன் வகுப்பு மாஸ்டருமான எச்.எம்.எம் பாக்கீர் மாஸ்டர் இன்று 30.04.2013 பிற்பகல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் எம். அப்துழ்ழாஹ் அவர்களின் முன் ஆஜர் செய்யப்பட்டபோது அவரை எதிர்வரும் 08.05.2013 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவி மீது கடந்த 22ம் திகதி இவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக அம்மாணவி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினம் முறைப்பாடு செய்திருந்தார். Continue reading