உருவச் சிலைக்கும், உருவப்படத்திற்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் கலைமானிப் பட்டம் பெற்றுக் கொண்டதாகக்கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எம்மைப்பற்றி விமர்சித்திருப்பது அவரது அறிவியல் சூனியத்தை அம்பலப்படுத்தியுள்ளது என ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழுவின் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காத்தான்குடியில் நேற்று (15.05.2015) வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஐம்பெரும் விழா நகழ்வில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கடந்த 13ம் திகதி காத்தான்குடி நூதனசாலையிலுள்ள உருவச்சிலைகளை அகற்றுமாறு கோரி நகர சபைக்கு முன்னால் நடாத்தப்பட்ட மக்கள் அழுத்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஜனநாயகக் கட்சியினர், அக்கட்சியின் தலைவர் ‘ஃபீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களின் உருவப்படத்துடன் கூடிய பதாதையை ஏந்தியிருந்தது பற்றி விமர்சனம் தெரிவித்திருந்தார். Continue reading →