-நகரசபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் ‘வார உரைகல்’லுக்கு அளித்த பேட்டி-
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளரால் 1000 நவீன பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டிருந்த காத்தான்குடி மத்திய கல்லூரியானது பிரதியமைச்சர் ஹ’pஸ்புல்லாஹ்வின் முயற்சியின் காரணமாகவே அத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் அறிந்த ‘வார உரைகல்’, அதனை அம்பலப்படுத்தி இருந்ததுடன் சமூகப் பொறுப்பாளர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டிருந்தது.
அதற்கமைய கடந்த 2011.04.27ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற காத்தான்குடி நகரசபைக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரேரித்திருந்த ‘1000 நவீன பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்கிற பிரேரணையுடன்,
‘நமதூரின் தனித்துவமான இஸ்லாமியக் கலாச்சாரத்திற் கமைவாக பெண் மாணவிகளின் பிரதான கல்வித் தளமாக உருவாகி வருகின்ற மீரா பாலிகா மகா வித்தியாலயத்தையும் இத்திட்டத்தில் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்ற ஆலோசனையையும் சமர்ப்பித்திருந்தது.
இப்பிரேரணையினதும், ஆலோசனையினதும் முக்கியத்துவத்தையும், பெறுமானத்தையும் புரிந்து கொண்டு அன்றைய நகரசபைக் அமர்வுக்குச் சமூகமளித்திருந்த தவிசாளர், உதவித் தவிசாளர் உள்ளிட்ட எட்டு மக்கள் பிரதிநிதிகளும் அப்பிரேரணையையும், ஆலோசனையையும் முற்று முழுதாக ஏற்றுக்கொண்டு இவ்விரு பாடசாலைகளையும் இத்திட்டத்தில் உள்வாங்க வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதை கடந்த வாரம் ‘வார உரைகல்’ தெரிவித்திருந்தது.
காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயம் ஆரம்பத்திலிருந்தே இத்திட்டத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை. எனினும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அக்கல்லூரியையும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்திருந்த யோசனை குறித்து அவ்வியக்கத்தின் சூறா சபை உறுப்பினரான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் அவர்கள் கடந்த 02ம் திகதி திங்கட்கிழமையன்று வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது ‘வார உரைகல்’ பேட்டி கண்டது. அந்நேர்காணலின் விபரம் இவ்வாரம் வாசகர்கள் பார்வைக்காகப் பிரசுரிக்கப்படுகின்றது. (ஆ-ர்)
கே: காத்தான்குடியைப் பொறுத்தவரை எவருமே சிந்திக்காதிருந்த மீரா பாலிகா மகா வித்தியாலத்தையும் அரசாங்கத்தின் 1000 நவீன பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை எப்படி உங்களின் இயக்கத்திற்கு ஏற்பட்டது?
Continue reading →