மட்ஃஜாமியுஸ்ஸலாம் இப்தார் விவகாரம்: ஜமாஅத்தார் கண்டனத்திற்கு வாசகர் விளக்கம்
கடந்த 10.09.2010 அன்று வெளியான ‘வார உரைகல்’ லின் 154ம் பதிவில் களம் வழங்கப் பட்டிருந்த ‘பள்ளிவாயலின் புனிதம் கெடுத்த இரண்டாம் இப்தார் நிகழ்ச்சி’ எனும் கண்டன அறிக்கையினை வாசித்தபோது பேரதிர்ச்சி அடைந்தேன். குறித்த ஆட்சேபனையைத் தெரிவித்த ஜமாஅத்தார்களின் தூர நோக்கற்ற சிந்தனையினைப் படம் பிடித்துக் காட்டுவதாய் அது அமைந்திருந்தது.
குறித்த கண்டன அறிக்கையில், இப்தார் நிகழ்வுக்கு மாற்று மத சகோதரர்கள் அழைக்கப்பட்டு பள்ளிவாயலினுள் வரவேற்கப்பட்டார்கள் என்கிற விடயத்துக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்ததனைக் காணக்கூடியதாக இருந்தது.
ஓர் இப்தார் நிகழ்வில் தேவையற்ற ஆடம்பரங்கள் இடம்பெற்றது என்பதற்காக அதனைக் கண்டித்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ‘பள்ளிவாயலில் நடைபெறும் ஒரு நிகழ்வு முறையாகக் கலந்தாலோசிக்கப்படாமல் நடத்தப்பட்டது’ என்ற ஆட்சேபனை எழுப்பப்பட்டால்கூட அதனையும் ஏற்கலாம். ஆனால் ‘மாற்று மதத்தவர் எவரும் பள்ளிவாய லுக்குள் கால் வைக்கக்கூடாது’ என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. Continue reading