மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாமில் இப்தார் நிகழ்வு
மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் நகரப் பள்ளிவாசல் நிருவாக சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு கடந்த 02ம் திகதி வியாழக்கிழமை மேற்படி பள்ளிவாசலில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நிருவாக சேவைகள் மற்றும் சிவில் இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட ஜமாஅத்தார்கள் மத்தியில் பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளரும் பிரபல சமூக சேவகருமான அலஹாஜ் கே.எம்.எம். கலீல் ஜே.பி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றுவதையும், சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி முதல்வர் கவிமணி அல்ஹாஜ் மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) அவர்கள் இஃப்தார் சிந்தனைச் சொற்பொழிவாற்றுவதையும், மேற்படி பள்ளிவாசலின் அழகிய தோற்றத்தையும் மேலேயுள்ள படங்களில் காணலாம்.