Archive for the ‘ 1 ’ Category

சம்மேளன அறிவித்தல்: இன்னொரு பினாமியை உருவாக்குமா?

காத்தான்குடிப் பொதுமக்களுக்கு பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் 05.03.2012ம் திகதியிட்டு ஒரு முக்கிய அறிவித்தலை வெளியிட்டுள்ளதுடன் அதனை கடந்த வாரத்தில் வீடு வீடாகவும் விநியோகித்திருந்தது.

ஏற்கனவே காத்தான்குடி நகரசபைத் தவிசாளரால் முன்வைக்கப்பட்டு சம்மேளனத்தினால் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடை முறைப்படுத்துவதற்கு தயாரான வேளையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்பூட்டல் நடவடிக்கைகளால் கைவிடப்பட்டிருந்த ‘குப்பை கொட்டக் காணி வாங்கக் காசு வாங்கும் திட்டம்’ என்ற வேதாளமே மீண்டும் முருங்கை மரமேறி சம்மேளனத்தின் முக்கிய அறிவித்தலாக வீட்டுக்கு வீடு வந்துள்ளது. Continue reading

பாடலி சொன்னால் பரவாயில்லை; சரத் சொன்னால்தான் சண்டையா?

எதிரணிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடப் போவதாக ஹேஸ்யம் கூறப்பட்ட நாள் தொடக்கம் அரசாங்கத்தின் பக்கமுள்ள எமது முஸ்லிம் அமைச்சர்களும், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் கட்சி மாறிய அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், உட்பட பலரும் ‘இலங்கை முஸ்லீம்கள் வந்தேறு குடிகள்’ என்று கொச்சைப்படுத்தப்பட்ட விவகாரத்தை திரிபு படுத்தியே பேசி வருகின்றனர். அந்தத் தொடரில் தற்போது கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சுபைர் ஹாஜியாரும் அதே திரிபு படுத்திய கருத்தை அரச ஊதுகுழல்களின் வாயிலாக நம் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார். 

உண்மையில் இவ்வளவு தெளிவாக இந்தக் கருத்தைச் சொன்னவர் இந்த அரசாங்கத்தில் இப்போதும் சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சராக நாவடக்கி வைக்கப்பட்டுள்ள ஜாதிக ஹெல உறுமய என்ற இனவாதக் கட்சியைச் சேர்ந்த பாடலி சம்பிக்க ரணவக்க என்பவர்தான். Continue reading

ஆத்மீகப் பெரியார் இலங்கை வருகை

காதிரிய்யா வர் ரிபாஇய்யா தரீக்காக்களின் ஷெய்ஹூ நாயகம் சங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ்  ஆரிப்பில்லாஹ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மத் புகாரி நல்ல கோயாத் தங்கள் வாப்பா நாயகம் அவர்கள் தமது முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்களைச் சந்திப்பதற்காக தற்போது இலங்கைக்கு வருகை தந்து மத்திய மாகாணம் கெலிஓயா – பட்டுபிடிய பிரதேசத்தில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.