சம்மேளன அறிவித்தல்: இன்னொரு பினாமியை உருவாக்குமா?
காத்தான்குடிப் பொதுமக்களுக்கு பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் 05.03.2012ம் திகதியிட்டு ஒரு முக்கிய அறிவித்தலை வெளியிட்டுள்ளதுடன் அதனை கடந்த வாரத்தில் வீடு வீடாகவும் விநியோகித்திருந்தது.
ஏற்கனவே காத்தான்குடி நகரசபைத் தவிசாளரால் முன்வைக்கப்பட்டு சம்மேளனத்தினால் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடை முறைப்படுத்துவதற்கு தயாரான வேளையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்பூட்டல் நடவடிக்கைகளால் கைவிடப்பட்டிருந்த ‘குப்பை கொட்டக் காணி வாங்கக் காசு வாங்கும் திட்டம்’ என்ற வேதாளமே மீண்டும் முருங்கை மரமேறி சம்மேளனத்தின் முக்கிய அறிவித்தலாக வீட்டுக்கு வீடு வந்துள்ளது. Continue reading