Archive for the ‘ கண்டனங்கள் ’ Category

மகாராஜா நிறுவனத்தின் மடமையும் மௌட்டீகமும்

14570500_1020427561402060_878300966890204548_nபுனித வேதத்திற்கே பூஜை செய்து புனஸ்காரம் நடாத்தியுள்ளது மகாராஜா ஊடக நிறுவனம்.

மாற்று சமயமொன்றைப்பற்றிய அடிப்படை அறிவையோ அந்த சமயத்தவர்களின் உணர்வுகளையோ பற்றிய சிந்தனையென்பது சிறிதளவும் இல்லாமல் மகாராஜா நிறுவனம் முட்டாள்தனமாக அரங்கேற்றிய இந்த செயற்பாடானது வன்மையான கண்டனத்திற்குட்பட்டது. Continue reading

KLM. பரீதின் ஊடக அறிக்கைக்கு புதிய காத்தான்குடி பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் கண்டனம்!

Salusala-Fareed-1புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் என்ற அமானிதமான பொறுப்பிலிருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் ஊடக அறிக்கை விட்ட கே.எல்.எம்.பரீட் இன் செயல்பாட்டினை பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் பலர் எமது வன்மையான கண்டனத்தை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமான காணி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (30.5.2016) நடாத்த இருந்த அரச கட்டடம் ஒன்றிக்கான அடிக்கல் நாட்டு விழா நிறுத்தப்பட்டுள்ளது என ஊடக அறிக்கை ஒன்றினை ஊடகங்களில் கான முடிந்தது.

இந்த ஊடக அறிக்கையினை வெளியிட்டவர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். Continue reading

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

images

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டமைக்கு எதிராக நுவரெலியா நகரசபை வளாகத்தில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். Continue reading

“கடற்படை அதிகாரியை திட்டித்தீர்த்த கிழக்கு மாகாண முதலமைச்சரை கைது செய்” – மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்!

DSCN9963கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட்டுக்கு எதிராக மட்டக்களப்பு நகரில் இன்று(26.5.2016) வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது.மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோ தலைமையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

Continue reading

பத்திரிகையாளர் MBM. பைரூஸின் ஓரக்கண் பார்வை….! NTJ வன்மையாகக் கண்டிக்கிறது!!

fairooz-photo

Journalist MBM. Fairoos

Sahran Masoothi

Moulavi MJM. ZAhran Masoothi

 

 

 

 

 

 

 

 

 

 

 

கடந்த 22.05.2016 ம் திகதியன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மல்வானைப் பகுதியில் அனர்த்த நிவாரண உதவியை வழங்கியது. இந்தக்கட்டத்தில் நபவிய்யா எனும் தரீக்கா குழுவினர் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களை மோசமாக வசைபாடியும் ஆயுதங்களால் தாக்கியதையும் அறிந்திருப்பீர்கள்!

இவ்வாறு வன்முறையாக நடந்த தரீக்கா குழுவினரின் கீழ்த்தரமான செயற்பாடுகளை பலரும் கண்டித்து வருகின்ற இச்சூழலில் காத்தான்குடி மௌலவி MHM. புஹாரி பலாஹியின் மகனும், பத்திரிகை ஆசிரியருமான MBM. பைரூஸ் என்பவர் இந்த விடயத்தில் முழுக்க முழுக்க பக்கசார்பாக எழுதியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது. Continue reading