சுனாமியால் பாதிக்கப்பட்டு முற்றாக அழிவடைந்த எமது காத்தான்குடி வைத்தியசாலையை பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கி நவீனமயப்படுத்தி முற்றிலும் புதிதாகக் கட்டியெழுப்ப அயராது முயற்சித்த, ஒத்துழைத்த, பங்களிப்புச் செய்த, அனுமதியளித்த…
சுகாதார அமைச்சு, நோர்வே நாட்டு மக்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளை, இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிப் பிரிவு, நமது மாகாண, மாவட்ட, பிரதேச அரசியல் பிரமுகர்கள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், நகர சபை, கிழக்கு மகாண சுகாதார அமைச்சு, சுகாதாரத் திணைக்களம் உள்ளிட்ட யாவருக்கும் ‘வார உரைகல்’ வாசகர்கள் சார்பாகவும், காத்தான்குடி நகர மக்கள் சார்பாகவும் எமது மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
2010.07.14ம் திகதி 675 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதியை வைபவ ரீதியாகத் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்காகக் கையளித்திட வருகைதரவுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க தேசிய அதியுயர் சபையின் கௌரவ நிர்வாகிகளையும், மட்டக்களப்பு மாவட்ட கிளை நிருவாகிகளையும், காத்தான்குடிப் பிரிவின் நிர்வாகிகளையும் மற்றும்…
கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்ட, காத்தான்குடி நகர அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், கனவான்கள் அனைவரையும் வாஞ்சையுடன் நாமும் வரவேற்கின்றோம்.
நோர்வே நாட்டு மக்களுடைய நிதிப் பங்களிப்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் அழகுற அமைத்துத் தரப்பட்டுள்ள இவ்வைத்தியசாலையை பொறுப்புடன் நாம் என்றென்றும் பாதுகாப்போம்!
நாமும் நமது சந்ததிகளும் இவ்வைத்தியசாலையின் மூலம் நோயற்ற வாழ்வினைப் பெற்று வாழ வேண்டுமென அன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் மனதாரப் பிரார்த்திப்போம்!!
-இது, ‘வார உரைகல்’ வாசகர் குடும்பத்தினால் வெளியிடப்படும் ஒரு வரலாற்றுப் பதிவாகும்-