‘வார உரைகல்’ – பதிவு: 230 திகதி: 28.05.2012 திங்கட்கிழமை ஒரே பார்வையில் பிரசுரமான செய்திகள்:
மோசடியும், பொய்யும் நிறைந்த சம்மேளனத்தின் புதிய தலைமையை ஏற்க முடியாதென பொதுச்சபை உறுப்பினர் நிராகரிப்பு!
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய தலைமைத்துவப் பொறுப்பு அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவர் எமதூர் சகோதரர்கள் அரசாங்கத்திடம் கையளிப்பதற்காக வழங்கியிருந்த தேசிய பாதுகாப்பு நிதியை மோசடி செய்தவராகவும், என்மீது அபாண்டமான பொய்யொன்றை பகிரங்கமாகக் கூறியவராகவும் இருக்கின்றார். எனவே மோசடியும், பொய்யும் நிறைந்த அவரது தலைமைத்துவத்தினை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தெரிவித்தார்.
சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டம் நேற்று 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணிக்கு முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலின் மேல்மாடியில் நடைபெற்றது. Continue reading