முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாக சபைத் தெரிவு மீண்டும் குழப்பத்தில் முடிவு!!
ஜமாஅத்தார் சங்கம் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கப் போவதாகவும் அறிவிப்பு!!!
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திpணைக்களத்தினால் இன்று 18ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டவாறு நடைபெறவில்லை. இன்றும் குழப்பமே முடிவாக அமைந்தது.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதேச சுகாதாரப் பணிப்பாளரிடம் ஏற்கனவே இரகசியமாகத் தெரிவித்திருந்தவாறே தேர்தலை நடாத்த வந்த மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நவவி அவர்களும், அதிகாரிகளும் வாக்கெடுப்புக்கு என ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் வேட்பாளர்களுடனும், ஜமாஅத்தார்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி காலத்தைக் கடத்தியதன் மூலம் வாக்கெடுப்பு நடைபெறாமல் தமது கடமையைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. Continue reading →