மே 18th, 2012 க்கான தொகுப்பு

ஜமாஅத்தார் சங்க வேட்பாளர் முஹ்ஸின் ஆசிரியர் வீட்டின் மீது கல்வீச்சு

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிம்பிக்கையாளர் சபைத் தெரிவுக்காக அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கத்தின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ஜனாப். ஏ.எம். முஹ்ஸின் (வேட்பாளர் இலக்கம்: 34) ஆசிரியரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Continue reading

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நவவியும் செயற்பட்டதாகக் குற்றச்சாட்டு!

முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாக சபைத் தெரிவு மீண்டும் குழப்பத்தில் முடிவு!!

ஜமாஅத்தார் சங்கம் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கப் போவதாகவும் அறிவிப்பு!!!

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திpணைக்களத்தினால் இன்று 18ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டவாறு நடைபெறவில்லை. இன்றும் குழப்பமே முடிவாக அமைந்தது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதேச சுகாதாரப் பணிப்பாளரிடம் ஏற்கனவே இரகசியமாகத் தெரிவித்திருந்தவாறே தேர்தலை நடாத்த வந்த மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நவவி அவர்களும், அதிகாரிகளும் வாக்கெடுப்புக்கு என ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் வேட்பாளர்களுடனும், ஜமாஅத்தார்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி காலத்தைக் கடத்தியதன் மூலம் வாக்கெடுப்பு நடைபெறாமல் தமது கடமையைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. Continue reading

‘வார உரைகல்’ பதிவு: 227 திகதி: 18.05.2012 வெள்ளிக்கிழமை. ஒரே பார்வையில் வெளிவந்த செய்திகள்:

நகரசபையின் குப்பை விவகாரம்: தீர்வு காண தேசிய ரீதியாகவும் பாரிய வசூல்

காத்தான்குடி நகரசபையின் திண்மக் கழிவகற்றும் திட்டத்திற்கான நிதி வசூல் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலும் இடம்பெறுகிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் 17ல் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சகல வீடுகளிலும் குடும்பத்திற்கு தலா 500 ரூபா வீதம் இதற்காகப் பணம் வசூலிக்கப்பட்டது. Continue reading