கி.மா. தேர்தலில் அப்துர் றவூப் மௌலவி தரப்பின் ஆதரவு சிப்லிக்கா? ஆஸாத் சாலிக்கா??
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான பொறியியலாளர் எம்.எப்.எம். சிப்லி அவர்களுக்கு அப்துர் றவூப் மௌலவி தரப்பினர் ஆதரவு வழங்குவார்களா? என்பதில் சந்தேகம் நிலவுவதாக அறியப்படுகின்றது.
அண்மையில் இத்தேர்தல் தொடர்பாக பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். ஜெஸீம் ஒரு கலந்துரையாடலை அப்துர் றவூப் மௌலவி தரப்பு ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதன்போது கருத்துத் தெரிவித்த ஆதரவாளர்கள் பலரும் இம்முறை தேர்தலில் யாருக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கதைகளைத் தங்களிடம் இனியும் கதைக்க வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Continue reading