“VAARAURAIKAL” Vol: 169 Date: 28.01.2011 Page: 04
இம்மாதம் (2011 ஜனவரி) வெளியான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ அச்சு ஊடகமான ‘புதிய நாளை’யில் வெளியான ஆசிரியர் தலையங்கம் குறித்து காத்தான்குடி இன்போ இணையதளத்தில் ‘அபூஹாதீ’ என்பவரால் தெரிவிக்கப்பட்டிருந்த விமர்சனத்திற்கு பதிலாக இணையதள வாசகர் எம். அப்துல் கப்பார் என்பவர் எழுதியனுப்பிய பதில் கருத்து மடலை அவ்விணையதளத்தினர் பிரசுரிக்காது இருட்டடிப்புச் செய்ததன் காரணமாக அவ்வாசகரின் வேண்டுகோளுக்கிணங்க ‘வார உரைகல்’ அதனை இங்கு பிரசுரிக்கின்றது. -பிரதம ஆசிரியர்-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இம்மாதம் வெளியிட்ட ‘புதிய நாளை’யின் 14வது இதழில் பிரசுரமான ‘நடுநிலையா? அல்லது நயவஞ்சகத்தனமா?’ என்னும் தலைப்பிலான ஆசிரியர் தலையங்கம் தொடர்பாக காத்தான்குடி இன்போ இணையதள வாசகர் அபூஹாதீ அவர்கள் எழுதியிருந்த கருத்து மடலை கண்ணுற்று அதுபற்றிய எனது கருத்துக்கள் சிலதையும் தங்களது இணையதளத்தில் பதிப்பிக்க விரும்பி இம்மடலை எழுதுகின்றேன்.
அபூஹாதி அவர்கள் தனது கருத்து மடலின் தொடக்கத்திலேயே, ‘ஒவ்வொரு சாராரும் சமூகத்தில் தேர்ந்தெடுத்துள்ள பணியினையே செய்து வருகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளதற்கமைய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் நமது காத்தான்குடித் தாயக மண்ணைத் தளமாகக் கொண்டு சமூகம், கல்வி, அரசியல் தொடர்பான நற்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் சமூகம், கல்வி மற்றும் அரசியல் பணிகளை முன்னெடுத்து வருவதால் ஏனைய சுகாதாரம், ஆன்மீகம், விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளில் எல்லாம் கவனம் செலுத்துகிறார்கள் இல்லை என்றும் சொல்ல முடியாது.
தேவைக்கேற்ப அத்துறை களிலும் அவ்வப்போது அவர்கள் கவனம் செலுத்தியே வருகிறார்கள் என்பதை கடந்த ஆறாண்டு காலத்தில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித் தொடர்களைத் தொடராகக் கவனித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெளிவாகும்.
கடந்த ஆறாண்டு காலத்திற்கு முன்னர் இவ்வியக்கம் தோற்றம் பெற்றதற்கான முக்கிய காரணம், நமதூரின் உட்கட்டமைப்பு நிர்வாகங்களில் மலிந்து காணப்பட்ட நிர்வாகச் சீர்கேடுகளும், ஊழல் மோசடி நடவடிக்கைகளுமேயாகும். Continue reading →