சம்மேளனப் பிரதிச் செயலாளர் சாதிகீன் நீதிமன்றத்தில் பிரதம ஆசிரியருடன் சமாதானமானார்!
-காத்தான்குடி சம்மேளனத்தின் செயற்பாடுகள் நேர்மையானவைதான் என்றால் இவ்வூடகத்தை அது உள்வாங்க மறுப்பதேன்? நான் என்ன பயங்கரவாதியா? அல்லது பிரபாகரனா? என பிரதம ஆசிரியர் கேள்வி-
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறு வனங்கள் சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் ஏ.எம். சாதிகீன், ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருடன் நீதிமன்றத்தில் சமாதானமானதையடுத்து காத்தான்குடி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் மீதான மற்றொரு வழக்கும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. Continue reading