ஜூன், 2014 க்கான தொகுப்பு

பௌத்த மதத்தினரைப் பீடித்துள்ள அநகாரிக மனோபாவம்: அன்றைய கம்பளை முதல் இன்றைய அளுத்கம வரை (ஒரு மீள்வாசிப்பு)

முஸ்லிம்களை மீண்டும் ‘ யூத சைலோக்களாக’க் காட்டும் முயற்சி ;

2015ல் இனக்கலவரம் வெடிக்கும் என்கிற அச்சத்தில் முஸ்லிம்கள்!

1915-1இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கறைபடிந்த கறுப்பு வருடமொன்று இருக்குமென்றால்இ அது கசப்பான துன்பவியல் சம்பவங்கள் நாடளாவ நிகழ்ந்தேறிய 1915 தான் என்பதை எவராலும் என்றுமே மறுக்க முடியாது

இலங்கையில் இந்த 1915 மே மாதம் 28 ல்தான் மிலேச்சத்தனமான, முஸ்லிம்களுக்கு எதிரான முதல் இனக்கலவரம் வெடித்திருந்தது. Continue reading

கோதபாய ராஜபக்ஷவை அமெரிக்கா கைது செய்யுமாம்! – பேராசிரியர் ரைடன் குட்மேன்

goவிடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் எப்படியும் வெற்றி பெறுவதற்காக அப்பாவிப் பொதுமக்களை வேண்டுமென்றே கொலை செய்ய தான் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என பலமுறை கோத்தபயா ராசபக்சே கூறியுள்ளார் என பேராசிரியர் ரைடன் குட்மேன் கூறியுள்ளார்.

Continue reading

மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், விசாரணைக்காக புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு

mujibur_rahman_001கடந்த வியாழக்கிழமை முஸ்லிம்கள் நடத்திய ஹர்த்தால் சம்பந்தமாக விசாரணை நடத்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.

Continue reading

இனவாதத்தை கைவிடாதவரை இலங்கைக்கு விடிவில்லை!

Racism-1_1”இலங்கையைக் குழப்புகிறதுக்காக அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருக்கு. இதுக்காகத்தான் அது பொதுபலசேனாவை ஊக்கப்படுத்துது.

பொதுபலசேனாவை வைச்சு முஸ்லிம்களுக்கு மேல தாக்குதல் நடத்தி, அவர்களை அரசாங்கத்துக்கு எதிராக மாத்த முயற்சிக்குது.

அப்பிடிச் செய்தால் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிச்சு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தைக் கவிழ்த்து விடலாம் எண்டு அது நினைக்குது.

முந்தி இப்பிடித்தான், நோர்வே ஊடாக விடுதலைப்புலிகளைப் பலப்படுத்தினது” எண்டு விமல் வீரவன்ச ஒரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறாரல்லோ…?  இதைக் கேட்டபோது எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. Continue reading

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் தயார் – ரவூப் ஹக்கீம் அதிரடி

rauf-hakeemஅரச செயற்பாடுகள் தந்த அதிருப்தியில் நான் இரு தடவைகள் அரசிலிருந்து ஓரமானவன். எனது சக்தியைப் பிரயோகிக்க வேண்டிய இடத்தில் அதை நான் பிரயோகித்திருக்கிறேன். பிரச்சினைகளுக்குத் தீர்வு அரசிலிருந்து விலகுவதுதான் என்றால், நான் அதற்கும் தயார் என நீதியமைச்சரும் ஶ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Continue reading

அளுத்கம வன்முறை: மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம்

slhumanஅளுத்கம வன்முறை தொடர்பிலான இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் கையளிக்கப்படும் என அதன் தலைவர் கலாநிதி பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார்.

Continue reading

கல்முனையில் ‘துஆ’ பிரார்த்தனைக்கு நீதிமன்றத் தடை! – சீறுகிறார் ஹரிஸ் எம்.பி!

harisபேருவளை, அளுத்கம மற்றும் தர்க்கா நகர் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக ‘துஆ’ பிரார்தனை நடத்துவதற்குமாக கல்முனையில் முஸ்லிம் வாழ்வுரிமைக்கான அமைப்பு இன்று (25.06.2014) புதன்கிழமை ஏற்பாடு செய்த நிகழ்வை நீதிமன்றம் ஊடாகத் தடை செய்தமைக்காக பொலிஸ் மா அதிபருக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் வெளியிட்டிருக்கின்றார்.

Continue reading

‘எம்மீது நிகழ்த்தப்பட்டது சாதாணர இனவாதத் தாக்குதல் மட்டுமன்றி, ஒரு பயங்கரவாதத் தாக்குதலுமாகும்’: பிரதேச வாசிகள் – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

Abdurrahman‘கடந்த 15ம், 16ம் திகதிகளில் பொது பல சேனா மற்றும் ராவண பலயா போன்ற பேரினவாத பௌத்த திவிரவாத அமைப்புக்களினால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அளுத்கம மற்றும் தர்ஹா நகர் பிரதேச முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஒரு இனவாதத் தாக்குதல் மாத்திரமல்ல, அவை முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதலுமாகும். அதற்கான மறுக்க முடியாத சான்றுகள் இங்கே களத்தில் இருக்கின்றன’ என குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபைப் பிரதிநிதிகளிடம் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றனர். Continue reading

அமெரிக்கா,சவூதி அரேபியா மீது பழி சுமத்தாதீர்! ஜிஹாத் அமைப்பு இருந்தால் அதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்! -நாடாளுமன்றத்தில் மங்கள காட்டம்

maஅளுத்கம இன வன்முறையின் பழியை அமெரிக்கா மீதோ அல்லது சவூதி அரேபியா மீதோ சுமத்த வேண்டாம். அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Continue reading

அடையாளம் காட்டப்பட்ட குருக்கள்மடம் புதைகுழிப் பிரதேசத்திற்கு பொலீஸார் பாதுகாப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன

ajithrauffகாத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றவூப் ஏ .மஜீத் அடையாளம் காட்டிய பகுதியில் தற்போது பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோகன தெரிவித்தார்.

Continue reading