ஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்!

UNP-1-22.05.2016

ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரிவின் அமைப்பாளர் நியமனம் தொடர்பாக, காத்தான்குடி ஐ.தே.கட்சியின் மத்திய குழுவினால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதென்றும், ஐ.தே.கட்சியின் அங்கத்தவராகவும், கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியவருமான ஒருவரையே இப்பதவிக்கு நியமிக்க வேண்டுமெனக் கோருவதாகவும் இன்று (22.05.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற மத்திய குழு செயற்குழக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டம், இன்று மாலை காத்தான்குடி ஐ.தே.கட்சி மத்திய குழுவின் செயலாளர் எம்.பி.ஏ. கையூம் அவர்களின் இல்லத்தில், மத்திய குழுவின் தலைவர் கே.எம்.எம். அலியார் தலைமையில் நடைபெற்றது. ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் அல்ஹாஜ் எச்.எம்.எம். முஸ்தபா, தவிசாளர் எம். முபாறக் மற்றும் பிரச்சாரச் செயலாளர் புவி. றஹ்மதுழ்ழாஹ் ஆகியோரும் சமூகமளித்திருந்த இக்கூட்டத்தில் மேற்கண்ட தீர்;மானத்துடன் பின்வரும் தீர்மானங்களும் ஏகமனதாக எடுக்கப்பட்டன:

1. ஐ.தே.கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரிவின் தலைவராக ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாஸிம் அவர்களை நியமிப்பதோடு, இம்முஸ்லிம் பிரிவில் அம்பாறை – திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சியில் அக்கறையெடுத்து வரும் கட்சிக்கு விசுவாசமானவர்களை நியமிக்குமாறும் கோருதல்.

2. ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணிப் பிரிவு உட்பட மத்திய குழுவின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் பொருத்தமான இடத்தில் அலுவலகம் ஒன்றை அமைத்தல்.
3. எதிர்வரும் புனித றமழான் மாதத்தில் மத்திய குழு உறுப்பினர்களுக்கான பொதுச்சபைக் கூட்டத்தை இப்தார் நிகழ்வுடன் நடாத்துதல்.

UNP-2-22.05.2016

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக