KLM. பரீதின் ஊடக அறிக்கைக்கு புதிய காத்தான்குடி பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் கண்டனம்!
புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் என்ற அமானிதமான பொறுப்பிலிருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் ஊடக அறிக்கை விட்ட கே.எல்.எம்.பரீட் இன் செயல்பாட்டினை பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் பலர் எமது வன்மையான கண்டனத்தை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமான காணி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (30.5.2016) நடாத்த இருந்த அரச கட்டடம் ஒன்றிக்கான அடிக்கல் நாட்டு விழா நிறுத்தப்பட்டுள்ளது என ஊடக அறிக்கை ஒன்றினை ஊடகங்களில் கான முடிந்தது.
இந்த ஊடக அறிக்கையினை வெளியிட்டவர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். Continue reading