மோசடிகள் தொடர்பான விசாரணைகளில் சம்பந்தப்பட அலியார் மௌலவக்கு என்ன அருகதையுள்ளது?
குர்ஆன் தமாம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட எட்டு ஹிப்ழு மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 20,000 ரூபாவில் 18,000 ரூபாவினை மோசடியாகக் கொள்ளையிட்ட மௌலவி ஹாலித் ஹஸன், மற்றும் மபாஸ் மௌலவி ஆகியோரின் நடவடிக்கைகள் தொடர்பாக முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த 01ம் திகதி இரவு இடம்பெற்ற விசாரணையின்போது அப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுடன் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரும், அப்பள்ளிவாசல் நம்பிக்கையாளருமான எஸ்.எம்.எம். அலியார் மௌலவி சம்பந்தப்பட்டிருந்ததை ‘வார உரைகல்’ வன்மையாகக் கண்டிக்கின்றது.
காத்தான்குடியில் இடம்பெறும் ஊழல், மோசடி விவகாரங்களை விசாரிப்பதற்கு அலியார் மௌலவிக்கு எந்தத் தகுதிகளும் கிடையாது எனவும் ‘வார உரைகல்’ வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறது. Continue reading