காத்தான்குடி பெரும்பான்மையான முஸ்லீம்களைக் கொண்டதோர் தனித்துவமான நகரம்.
இந்நகர மக்களின் இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய முதன்மை நிறுவனம் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவாகும்.
காத்தன்குடி ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் அது பல்வேறு சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கி தாக்குப்பிடித்து செயற்பட்டு வந்துள்ளது.
ஒரு சமய நிறுவனம் என்ற வகையில் மார்க்க ரீதியாக எழுகின்ற எவ்வாறான நிலைமைகளையும் கையாள வேண் டிய பொறுப்பும், கடமையும் ஜம்இய்ய துல் உலமாவுக்கே உள்ளது என்ற வகையில் 1978 மற்றும் 2004ம் ஆண்டுகளில் காத்தான்குடியில் தோற்றம் பெற்ற அகீதா தொடர்பான முரண்பாடுகள் ஒருவிதத்தில் கையாளப்பட்டு அது ஈற்றில் வன்முறை வரைக்கும் சென்றதோடு நான்கு உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழக்க வேண்டியும் ஏற்பட்டது.
அத்தோடு காத்தான்குடி என்ற எமது நகருக்கு சர்வதேச அரங்கில் வித்தியாசமான பார்வைகளையும் தோற்றுவித்தது. இந்தப் பிரச்சினைகள் கூட இன்றும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.
அவை அவ்வாறிருக்க, தற்போது நம் காத்தான்குடியின் மார்க்க நிலவரம் இன்னும் மோசமான நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
அண்மைக் காலமாக தஃவா அமைப்புக்கள் எனத் தங்களை இனங்காட்டிக் கொள்கின்ற பல அமைப்புக்கள் மார்க்க ரீதியாக கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்கள் தொடர்பில் தனித் தனியாக பள்ளிவாயல்களை அமைத்தல், சனசமூக நிலையங்கள், வீடுகள் என்பவற்றில் ஜும்ஆக்களை ஆரம்பித்தல், கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்கள் தொடர்பில் ஒருவருக்கொருவர் முரண்பாடான மார்க்கத் தீர்ப்புக்களை வழங்குதல் என மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். Continue reading →