மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரம் தொடர்பில் இம்மாவட்ட முஸ்லிம் சமூக நாடாளுமன்றப் பிரதிநிதிகளும், சிவில் சமூக தாய் நிறுவனமான சம்மேளனமும் புறக்கணிக்கப்பட்டுவரும் இக்காலப்பகுதியில் தனது பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் இவ்விவகாரத்தில் கூடிய அக்கறை கொண்டு செயற்பட்டுவரும் காத்தான்குடி நகரசபை நல்லாட்சி உறுப்பினரும், சம்மேளனத்தினால் மீள்குடியேற்ற விவகாரங்களுக்காக நியமிக்கப்பட்ட விஷேட குழு உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் கடந்த 20ம் திகதியன்று நடைபெற்ற நமது சம்மேளனக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதிருந்த வேளையிலும் சமூகப் பொறுப்புடன் சம்மேளன நிர்வாகத்தின் கவனத்திற்கும், பரிசீலனைக்குமாக 19.06.2010 அன்று எழுதி அனுப்பியிருந்த இக்கடிதம், இம்மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலுமாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் நலன் கருதியும், அவர்களின் கவனயீர்ப்பை வேண்டியும் இங்கே முழுமையாகப் பிரசுரிக்கப்படுகின்றது. (பிரதம ஆசிரியர்)
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்…
மீள் குடியேற்ற நடவடிக்கைகளும் முஸ்லிம்களும்
தவிர்க்க முடியாத காரணத்தினால் நாளை (20.06.2010) நடை பெறவுள்ள சம்மேளனத்தின் வாராந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு முதலில் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தோடு நாளையக் கூட்டத்தில் கண்டிப்பாகக் கலந்துரையாட வேண்டும் என நான் கருதிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு முன் வைப்பதற்காக இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
கடந்த சம்மேளனக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசாங்க நடவடிக்கைககள் தொடர்பாகவும், குறிப்பாக கடந்த 15.06.2010 அன்று மட்டக்களப்புக் கச்சேரியில் நடாத்தப்பட்ட உயர் மட்டக் கூட்டம் தொடர்பாகவும் நாம் பேசியிருந்தோம். Continue reading →