ஜூன் 27th, 2010 க்கான தொகுப்பு

சம்மேளன இருப்பில் காட்டப்பட்ட 1,00,000 ரூபாவுக்கான காசோலை எங்கே?

தாய் வீட்டு விவகாரங்கள் :4

காத்தான்குடி சமூகத்தின் தாய் நிறுவனம் எனக் கருதப்படும் சம்மேளனத்தின் வாராந்தக் கூட்டம் கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலையில் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் கூடியதாம்.

ஆரம்பத்திலேயே மீள்குடியேற்ற அமைச்சரின் காத்தான்குடி வருகை தொடர்பில் சம்மேளன நிர்வாகத்தின் சார்பில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற முரண்பட்ட சந்திப்பு குறித்த விடயம் விவாதப் பொருளாகி, அதனுடன் நகர சபையின் நல்லாட்சி உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் ‘வார உரைகல்’ மூலம் விடுத்த கண்டன அறிக்கையையும் சேர்த்துக் கொண்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டனவாம்.

தொடக்கத்தில் பொருளாளர் பஷீர் ஹாஜியார் அது தொடர்பான நீண்ட விளக்கமொன்றை சபையில் விலாவாரியாக எடுத்துக் கூறியதுடன் முன்னாள் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் சுபைர் CC அவர்களை நோக்கி அமைச்சரைச் சந்திக்காததற்கான காரணத்தைத் தெரிவிக்கும்படி வேண்டிக் கொண்டாராம். Continue reading